search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு ஆபத்து"

    போடியில் பரபரப்பு துர்நாற்றம் வீசும் குப்பைகளால் மாணவர்களுக்கு ஆபத்து

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே போடியில் ஜ.க.நி ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 1,000மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்தபள்ளியின் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது.

    அதன் அன்றாட குப்பைகளை இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதிகளில் குப்பைகளை நகராட்சி சேகரிக்கின்றன. குப்பைகளால் மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    பள்ளியில் பயிலும் சிறு வயது குழந்தைகள் என்பதால் குப்பைகளின் துர்நாற்றத்தினால் அடிக்கடி குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்படுகின்றது.

    கல்வி கற்கும் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதால் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது.

    எனவே நகராட்சியும், பள்ளி நிர்வாகவும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கும் இடத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ×